search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl friend death"

    ஒடுக்கத்தூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அருகே உள்ள அத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் வல்லரசு (வயசு 19). கம்பி கட்டும் தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இதனையறிந்த பெற்றோர் இளம்பெண்ணை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த இளம்பெண் கடந்த மாதம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    காதலி இறந்த துக்கத்தில் மனமுடைந்து வல்லரசு சுற்றி திரிந்தார். நேற்று மாலை அவரது விவசாய நிலத்துக்கு சென்றார். அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை கயிறு போல கிழித்து அங்கிருந்து கீற்று கொட்டகையில் தூக்கிட்டு இறந்தார்.

    இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் திடுக்கிட்டனர். இதுபற்றி தகவலறிந்த ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுபற்றி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவோணம் அருகே தனியார் பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்- கள்ளக்காதலி பலியாகினர்.

    திருவோணம்:

    சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கோமதிராஜன் (வயது 36). இவர் திருப்பூரில் உள்ளி ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அருகே கே.ராசியமங்கலத்தை சேர்ந்தவர் ஏஜினஸ்(37). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு ராஜேஷ், சங்கவி என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    கோமதிராஜனுடன் ஏஜினசும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இதனால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து வாழ்ந்த ஏஜினஸ், கோமதிராஜனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில் கோமதிராஜன், தனது கள்ளக் காதலி ஏஜினசை அழைத்து கொண்டு பட்டுக்கோட்டையில் நடக்கும் நண்பர் ஒருவரது வீட்டு திருமணத்திற்காக திருப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    திருவோணம் அருகே உள்ள வேப்பங்காடு இடத்தில் இன்று காலை சென்றபோது அந்த வழியே வேகமாக சென்ற ஒரு தனியார் பஸ் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி சென்று இருவரையும் மீட்க முயன்றனர்.

    ஆனால் விபத்தில் கோமதிராஜனும், ஏஜினசும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானது தெரியவந்தது.

    பின்னர் இதுபற்றி திருவோணம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., செங்கமலக்கண்ணன், திருவோணம் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார், இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தை ஏற்படுத்திய வெள்ளாளர் விடுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் முத்துவை(32) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    தனியார் பஸ் மோதி கள்ளக்காதலியுடன் வாலிபர் பலியான சம்பவம் திருவோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×