என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்தாமரைகுளம் அருகே குடும்பத்தினரை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்கியவர் பலி
Byமாலை மலர்27 Aug 2019 1:55 PM GMT (Updated: 27 Aug 2019 1:55 PM GMT)
தென்தாமரைகுளம் அருகே புரோட்டா பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டதில் குடும்பத்தினரை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்தாமரைகுளம்:
தென்தாமரைகுளம் அருகே உள்ள கோவில் விளையைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 54). இவருக்கு சதீஷ் (24), லிங்கராஜா (22) என்ற 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சந்திரசேகரும், அவரது மகன்களும் தேங்காய் உறிக்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று இரவு சாப்பாட்டுக்காக கடையில் இருந்து புரோட்டா வாங்கினர். அதை பங்குவைத்து சாப்பிடுவதில் சதீசுக்கும், அவரது தம்பி லிங்கராஜாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சதீஷ் அணிந்திருந்த தங்கச்சங்கிலி அறுந்து விழுந்தது.
இதனால் சதீஷ் மன வேதனை அடைந்தார். கோபித்துக்கொண்டு ஒரு அறைக்குள் ஓடிய சதீஷ், அங்கு தாயாரின் சேலையில் தூக்குப்போட்டு தொங்கினார். சந்தேகத்தில் அவரது குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு சதீஷ் தூக்கில் தொங்கிய படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு கொட்டாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி தென்தாமரை குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சதீசின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ் குடும்பத்தினரை மிரட்டுவதற்காக தூக்கில் தொங்குவது போல் நடித்து இருக்கலாம் எனவும், ஆனால் எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை முழுவதுமாக இறுக்கி இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X