search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ராஜபாளையத்தில் இன்று காலை விபத்து - தச்சு தொழிலாளி பலி

    மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது60). தச்சு தொழிலாளியான இவர் இன்று காலை மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார்.

    டி.பி. மில்ஸ் ரோடு- மதுரை ரோடு சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாடசாமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக லாரி டிரைவர் மலையடிப் பட்டியைச் சேர்ந்த முகமது ராவ் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×