search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கிருமாம்பாக்கத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை

    கிருமாம்பாக்கத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் பனங்காட்டு காலனியை சேர்ந்தவர் குணசீலன் (வயது 46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தவ்ஸ்லின் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து குணசீலனின் 2 குழந்தைகள் குருவிநத்தத்தில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து வந்தனர். 

    இதற்கிடையே மனைவி இறந்த வேதனையில் குணசீலன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். ஆனாலும், மனைவியின் நினைவாகவே சோகத்துடன் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த குணசீலன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு கிருமாம்பாக்கம் சுடுகாட்டு அருகே உள்ள ஆலமரத்தில் கைலியால் தூக்குபோட்டு குணசீலன் தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×