என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருமாம்பாக்கத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்20 Aug 2019 2:14 PM GMT (Updated: 20 Aug 2019 2:14 PM GMT)
கிருமாம்பாக்கத்தில் மனைவி இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் பனங்காட்டு காலனியை சேர்ந்தவர் குணசீலன் (வயது 46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தவ்ஸ்லின் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து குணசீலனின் 2 குழந்தைகள் குருவிநத்தத்தில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து வந்தனர்.
இதற்கிடையே மனைவி இறந்த வேதனையில் குணசீலன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். ஆனாலும், மனைவியின் நினைவாகவே சோகத்துடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த குணசீலன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு கிருமாம்பாக்கம் சுடுகாட்டு அருகே உள்ள ஆலமரத்தில் கைலியால் தூக்குபோட்டு குணசீலன் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X