என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி - 2 பேர் படுகாயம்
Byமாலை மலர்20 Aug 2019 2:06 PM GMT (Updated: 20 Aug 2019 2:06 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய குந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் சுனில் (வயது23). இவர், தனது பைக்கில் கஞ்சனூர் பகுதியை சேர்ந்த திம்மராஜ் மகன் சுரேஷ் (19), கிருஷ்ணப்பா மகன் லட்சுமணன்(26) ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் ஏற்றிக்கொண்டு ஓசூர் -கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி மேம்பாலம் அருகே எதிர் திசையில் தவறுதலாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த லோடு வேனில், சுனில் ஓட்டி வந்த பைக் மோதியது.
இந்த விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுனில் மற்றும் லட்சுமணன் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த குருபரபள்ளி போலீசார், சுரேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X