search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    பொள்ளாச்சி, வடவள்ளியில் 7½ பவுன் தங்க நகைகள்-ரூ.64 ஆயிரம் பணம் திருட்டு

    பொள்ளாச்சி, வடவள்ளியில் 7½ பவுன் தங்க நகைகள்-ரூ.64 ஆயிரம் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பொள்ளாச்சி அருகே உள்ள குஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 30). கூலித் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு காளிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். மறுநாள் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 3½ தங்க நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து மகாலிங்கம் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடவள்ளியை சேர்ந்தவர் ஜோலி பவுல் (வயது 52). வியாபாரி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்றார்.

    மறுநாள் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு அறையில் பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ. 34 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து ஜோலி புவுல் வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் ஜான் சாமுவேல் கிறிஸ்டோபர் (32). இவர் அந்த பகுதியில் டிப்பார்ட்மெண்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவில் இருந்த ரூ. 30 ஆயிரம் பணம், கண்காணிப்பு கேமிரா ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஜான் சாமுவேல் கிறிஸ்டோபர் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×