search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

    ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம் நல்லமணி நகரை சேர்ந்தவர் சவுந்தர். இவரது மகன் கவுதம்(வயது16). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த ஒருவாரமாக இவர் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை.

    இதனால் அவரை வீட்டில் கண்டித்தனர். இந்நிலையில் கடந்த 14-ந்தேதி பள்ளி செல்வதாக கூறிச்சென்ற கவுதம் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனிடையே கவுதம் அருப்புகோட்டை நாயக்கன்பட்டி அருகே அய்யனார் கோவில் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி அறிந்த வைகை அணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கவுதம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×