என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரத்தை ‘பூமிக்கு பாரமானவர்’ என்பதா? - முதல்வர் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
Byமாலை மலர்14 Aug 2019 9:55 AM GMT (Updated: 14 Aug 2019 9:55 AM GMT)
‘பூமிக்கு பாரமானவர்’ என்று ப.சிதம்பரம் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டியில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கடுமையாக தாக்கி பேசினார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக ப.சிதம்பரம் எதுவும் செய்யவில்லை என்றும் பூமிக்கு அவர் பாரமாக இருப்பதாகவும் விமர்சித்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ப.சிதம்பரம் பற்றி கூறிய கருத்து குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் பொறுப்பிழந்து பதவி என்ற ஒன்றை மறந்து இவ்வளவு கீழ்த்தரமாக பேசி இருக்கிறார். நேற்றைய தினம், கோவைக்கு வந்திருக்கின்றார். அப்போது அருகில் தான் ஊட்டி இருக்கிறது அவர் போகவில்லை.
இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை. முதலில் அவர் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன் என்றார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி இருப்பதாவது:-
ப.சிதம்பரம் குறித்து முதல்-அமைச்சர் சொன்னதில் தவறே கிடையாது. பதவியில் இருந்தபோது தமிழகத்துக்காக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
எந்த உதவியும் செய்யாமல் பல்லாண்டு காலம் மந்திரி சபையில் இருந்தார். அவரால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த பேட்டியில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை கடுமையாக தாக்கி பேசினார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக ப.சிதம்பரம் எதுவும் செய்யவில்லை என்றும் பூமிக்கு அவர் பாரமாக இருப்பதாகவும் விமர்சித்தார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ப.சிதம்பரம் பற்றி கூறிய கருத்து குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய ஒருவர் பொறுப்பிழந்து பதவி என்ற ஒன்றை மறந்து இவ்வளவு கீழ்த்தரமாக பேசி இருக்கிறார். நேற்றைய தினம், கோவைக்கு வந்திருக்கின்றார். அப்போது அருகில் தான் ஊட்டி இருக்கிறது அவர் போகவில்லை.
இதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை. முதலில் அவர் இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன் என்றார்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி இருப்பதாவது:-
ப.சிதம்பரம் குறித்து முதல்-அமைச்சர் சொன்னதில் தவறே கிடையாது. பதவியில் இருந்தபோது தமிழகத்துக்காக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
எந்த உதவியும் செய்யாமல் பல்லாண்டு காலம் மந்திரி சபையில் இருந்தார். அவரால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X