search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புத்தகத்தை வெளியிட்ட அமித்ஷா
    X
    புத்தகத்தை வெளியிட்ட அமித்ஷா

    வெங்கையா நாயுடு புத்தகத்தை வெளியிட்டார் உள்துறை மந்திரி அமித்ஷா

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடர்பான ஆவண புத்தகத்தை உள்துறை மந்திரி அமித்ஷா சென்னையில் இன்று வெளியிட்டார்.
    சென்னை:

    துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த பணிகளை ஆவணப்படுத்தும் வகையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” எனும் தலைப்பில் புத்தகம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார்.

    இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×