search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவாரூர் அருகே தாய்-தந்தையை தாக்கிய மகன் கைது

    திருவாரூர் அருகே தாய்-தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே கமலாபுரம் அடுத்த குணவாசல் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 53). இவரது மனைவி பூமயில்(50). இவர்களது மகன் தினேஷ் (29).

    இந்த நிலையில் தினேஷ் தனது மனைவி புவனேஸ்வரியுடன் பெற்றோர் வீடு அருகே தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.

    நேற்று பூமயிலுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்கு வாதம் வந்தது. அப்போது அங்கு வந்த தினேஷ், மனைவிக்கு ஆதரவாக பேசி தாயை கண்டித்தார். அந்த சமயத்தில் சண்முகமும் வந்து மகனை கண்டித்து சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ், பெற்றோர் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கினார். மேலும் அருகே கிடந்த சிமெண்டு காரையால் சண்முகம், பூமயிலை தாக்கினார். இதில் இருவருக்கும் தலையில் பல்தத காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி பூமயில் கொடுத்த புகாரின்பேரில் வடபாதிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தாய்- தந்தையை தாக்கிய தினேசை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×