என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கன்னியாகுமரியில் நீர்மட்டம் தாழ்வால் படகு போக்குவரத்து தாமதம்
Byமாலை மலர்3 Aug 2019 9:43 AM GMT (Updated: 3 Aug 2019 9:43 AM GMT)
கன்னியாகுமரியில் இன்று அதிகாலை முதல் வங்கக்கடலில் நீர்மட்ட தாழ்வு ஏற்பட்டது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிப்பதால் இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக படகு போக்குவரத்தும் நடைபெறுகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்படுகிறது.
விவேகானந்தா, குகன், பொதிகை என்ற 3 படகுகள் மூலம் சேவை நடந்து வருகிறது. தற்போது விவேகானந்தா படகு பழுது பார்க்கும் பணிக்காக சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் 2 படகுகள் மட்டுமே சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரியில் வங்கக்கடலில் நீர்மட்ட தாழ்வு ஏற்பட்டது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து நடைபெறும் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் படகுத்துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிப்பதால் இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக படகு போக்குவரத்தும் நடைபெறுகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகுகள் இயக்கப்படுகிறது.
விவேகானந்தா, குகன், பொதிகை என்ற 3 படகுகள் மூலம் சேவை நடந்து வருகிறது. தற்போது விவேகானந்தா படகு பழுது பார்க்கும் பணிக்காக சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் 2 படகுகள் மட்டுமே சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்று வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரியில் வங்கக்கடலில் நீர்மட்ட தாழ்வு ஏற்பட்டது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து நடைபெறும் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் படகுத்துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X