என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேச்சேரி பஸ் நிலையத்தில் ஏட்டு, சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ராணுவ வீரர்
மேச்சேரி:
சேலம் மாவட்டம் மேச்சேரி பஸ் நிலையத்தில் நேற்றுஇரவு ஒருவர் தகராறில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேச்சேரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி, ஏட்டு பாபு ஆகியோர் அங்கு சென்று தகராறு செய்து கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்த முயன்றனர்.
அப்போது அவர் சப்- இன்ஸ்பெக்டர் குருசாமி, ஏட்டு பாபு ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவரது பெயர் தர்மராஜ் (வயது 34) என்பதும் மேச்சேரி தெப்பக்குள வீதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் மேற்கு வங்காள மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது அவர் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசாரை தாக்கியதாக தர்மராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் மேச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்