என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சியில் கல்லூரி மாணவிகள் கடத்தல்?
Byமாலை மலர்22 July 2019 1:24 PM GMT (Updated: 22 July 2019 1:24 PM GMT)
திருச்சியில் கல்லூரிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பாதது குறித்து மாணவிகளின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் கீழ அடைவளஞ்சான் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகள் லலிதா (வயது 19).
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த மணிவேல் மகள் அடைக்கல ஆஷிதா(19). இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள பிரபல கல்லூரியில் பி.பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வந்தனர். கடந்த 18-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இருவரும் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து உறையூர் போலீசில் மாணவிகளின் பெற்றோர் புகார் செய்தனர்.அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவிகள் எங்கு சென்றனர். படிக்க பிடிக்காததால் வீட்டை விட்டு சென்றனரா? அல்லது யாரேனும் கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி 2 பேரையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X