என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருக்கனூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தொழிலாளி மயங்கி விழுந்து பலி
திருக்கனூர்:
திருத்தணி அருகே ராஜ பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 46). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிறுவனம் மூலம் வெல்டிங் வேலை செய்வதற்காக திருக்கனூர் அருகே தேத்தாம்பாக்கத்தில் உள்ள சொட்டு நீலம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கங்காதரன் வந்திருந்தார். தொழிற்சாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி அவர் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று கங்காதரன் தொழிற்சாலையில் ஜே.சி.பி. எந்திரத்தில் நின்று கொண்டு வெல்டிங் வேலையில் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் கங்காதரனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கங்காதரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே தொழிற்சாலை ஊழியர்கள் சிலர் மின்சாரம் தாக்கி கங்காதரன் இறந்து போனதாக தெரிவித்தனர். இதனையடுத்து காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் சந்தேக மரணமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்