என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூர் அருகே கேரளாவுக்கு புலித்தோல் கடத்திய கும்பல் கைது
Byமாலை மலர்19 July 2019 6:16 AM GMT (Updated: 19 July 2019 6:16 AM GMT)
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரளாவுக்கு புலித்தோல் கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர்.
கூடலூர்:
தமிழக - கேரள எல்லை வண்டி பெரியாறு, வல்லக்கடவு வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது குமுளியில் இருந்து கோட்டயம் நோக்கி வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர்.
அதில் புலித்தோல் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது. விசாரணை நடத்தியதில் அவர்கள் சிவகாசியைச் சேர்ந்த நாராயணன் (வயது 71), கமுதியைச் சேர்ந்த சக்கரை (51), முருகன் (42), கொடைக்கானலைச் சேர்ந்த கருப்பையா (54), திருநெல்வேலியைச் சேர்ந்த ரத்தினவேல் (50) என தெரிய வந்தது.
இவர்கள் கோட்டயத்தில் ஒருவருக்கு புலித்தோலை விற்பதற்காக கொண்டு சென்றதாக தெரிவித்தனர். வல்லக்கடவு வனச்சரகர் அஜிஸ் அவர்கள் 5 பேரையும் கைது செய்து புலித்தோல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் கூடலூர் அருகே பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு அன்னிய நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சரணாலய பகுதியில் புலி வேட்டையாடப்பட்டு அதன் தோல் கடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக - கேரள எல்லை வண்டி பெரியாறு, வல்லக்கடவு வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது குமுளியில் இருந்து கோட்டயம் நோக்கி வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர்.
அதில் புலித்தோல் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது. விசாரணை நடத்தியதில் அவர்கள் சிவகாசியைச் சேர்ந்த நாராயணன் (வயது 71), கமுதியைச் சேர்ந்த சக்கரை (51), முருகன் (42), கொடைக்கானலைச் சேர்ந்த கருப்பையா (54), திருநெல்வேலியைச் சேர்ந்த ரத்தினவேல் (50) என தெரிய வந்தது.
இவர்கள் கோட்டயத்தில் ஒருவருக்கு புலித்தோலை விற்பதற்காக கொண்டு சென்றதாக தெரிவித்தனர். வல்லக்கடவு வனச்சரகர் அஜிஸ் அவர்கள் 5 பேரையும் கைது செய்து புலித்தோல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
தமிழக - கேரள எல்லைப்பகுதியில் கூடலூர் அருகே பெரியாறு புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு அன்னிய நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சரணாலய பகுதியில் புலி வேட்டையாடப்பட்டு அதன் தோல் கடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X