என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்18 July 2019 5:55 PM GMT (Updated: 18 July 2019 5:55 PM GMT)
தூசி அருகே திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.
தூசி:
தூசி அருகே உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் சரவணன் (வயது 22). இவர், பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் முதலில் தங்கைக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின்னர் உனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சரவணன் தனது பெரியப்பா வீட்டிற்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தூசி அருகே உள்ள கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மகன் சரவணன் (வயது 22). இவர், பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெற்றோர் முதலில் தங்கைக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, பின்னர் உனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சரவணன் தனது பெரியப்பா வீட்டிற்கு சென்று அங்கு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜித்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X