search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    போடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

    போடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள முந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் கார்த்திக் (வயது 25). இவர் குரங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு மாங்காய் குடோனில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இன்று காலை கார்த்திக் உடலை பார்த்த அப்பகுதி மக்கள் குரங்கணி போலீசாருக்க தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கார்த்திக்குக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. ஒரு வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×