search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மதுரை அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை

    பட்டப்பகலில் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    ஊமச்சிகுளத்தை அடுத்த திருமால்புரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது28). இவர் நேற்று மாலை வீட்டை பூட்டி விட்டு தாயுடன் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக மதுரை சென்றார்.

    அப்போது யாரோ மர்ம நபர்கள் கூரையை பிரித்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 2 கிராம் தங்க டாலர், ஒருஜோடி வெள்ளிக் கொலுசு, வெள்ளி அரைஞாண் கயிறு மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக முத்துக்குமார் ஊமச்சிகுளம் போலீ சில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா தேவி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.

    Next Story
    ×