என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமங்கலத்தில் காதல் ஜோடி போலீசில் தஞ்சம்
பேரையூர்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் முத்துராஜ் (வயது 25) என்ஜினீயர்.
இவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் படித்த அருப்புக்கோட்டை நிரஞ்சனவுடன் (24) பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் 3 ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதல் ஜோடி இதனை ஏற்கவில்லை.
இந்த நிலையில் 3-ம் ஆண்டு படித்து வந்த நிரஞ்சனா, வீட்டை விட்டு வெளியேறி காதலரை திருமணம் செய்தார்.
தொடர்ந்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தது. போலீசார் இருவரின் பெற்றோரையும் அழைத்து பேசினர். மேஜர் பெண்ணான நிரஞ்சனா, கணவருடன் செல்ல விரும்புவதாக கூறியதால் அவரை முத்துராஜூடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்