என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரல்வாய்மொழி அருகே வலைக்கம்பெனி பெண் ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்8 July 2019 10:25 AM GMT (Updated: 8 July 2019 10:25 AM GMT)
ஆரல்வாய்மொழி அருகே குடும்ப தகராறு காரணமாக வலைக்கம்பெணி பெண் ஊழிர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியை அடுத்த சீதப்பால் பொதுப்பணித்துறை கெஸ்ட் ஹவுஸ் பகுதியில் வசிப்பவர் ஸ்டீபன் மரிய அற்புதம் (வயது 42). கொத்தனார். இவரது மனைவி அருள் பியூலா (30). இவர்களுக்கு ஆல்வின் (8), அஸ்வின் (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
அருள்பியூலா நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள வலைக்கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அருள்பியூலா வீட்டில் சரிவர சமையல் செய்யாமல் இருந்தாராம். இதனை ஸ்டீபன் மரிய அற்புதம் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவும் ஸ்டீபன் மரிய அற்புதத்துக்கும், அருள்பியூலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஸ்டீபன் மரியஅற்புதம் மாடிக்கு சென்று படுத்துக் கொண்டார். நள்ளிரவில் அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தார். அப்போது அருள் பியூலா சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் சத்தம் போட்டு கதறி அழுதார். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அருள் பியூலாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் அருள்பியூலா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கணவருடன் தகராறு ஏற்படும்போதெல்லாம் தான் தற்கொலை செய்யப்போவதாக அருள்பியூலா மிரட்டி வந்துள்ளார். நேற்று அவர் மனம் உடைந்து தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அருள் பியூலாவின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழியை அடுத்த சீதப்பால் பொதுப்பணித்துறை கெஸ்ட் ஹவுஸ் பகுதியில் வசிப்பவர் ஸ்டீபன் மரிய அற்புதம் (வயது 42). கொத்தனார். இவரது மனைவி அருள் பியூலா (30). இவர்களுக்கு ஆல்வின் (8), அஸ்வின் (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
அருள்பியூலா நாகர்கோவில் கோணம் பகுதியில் உள்ள வலைக்கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அருள்பியூலா வீட்டில் சரிவர சமையல் செய்யாமல் இருந்தாராம். இதனை ஸ்டீபன் மரிய அற்புதம் கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவும் ஸ்டீபன் மரிய அற்புதத்துக்கும், அருள்பியூலாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஸ்டீபன் மரியஅற்புதம் மாடிக்கு சென்று படுத்துக் கொண்டார். நள்ளிரவில் அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து பார்த்தார். அப்போது அருள் பியூலா சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் சத்தம் போட்டு கதறி அழுதார். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அருள் பியூலாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் அருள்பியூலா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. கணவருடன் தகராறு ஏற்படும்போதெல்லாம் தான் தற்கொலை செய்யப்போவதாக அருள்பியூலா மிரட்டி வந்துள்ளார். நேற்று அவர் மனம் உடைந்து தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக அருள் பியூலாவின் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X