என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரும்பாக்கத்தில் மின்தடை- நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்
அண்ணாநகர்:
அரும்பாக்கத்தில் ராணி அண்ணாநகர் தெரு உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கியுள்ளனர். இங்கு தொடர்ந்து 5 நாட்களாக மின்சார சப்ளை இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டனர். மின் வாரிய அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் இது குறித்து புகார் செய்தனர். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் கொந்தளித்த மக்கள் நேற்று நள்ளிரவு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அரும்பாக்கம் என்.எஸ்.நகர் சிக்னல் அருகே ஏராளமானோர் திரண்டு இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அண்ணாநகர் போக்குவரத்து துணை ஆணையாளர் ஷியாமளாதேவி, இன்ஸ் பெக்டர்கள் வசந்த், சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் எங்கள் பகுதியில் மின்சாரம் வந்தால்தான் சாலை மறியலை கைவிடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை (இன்று) சீர்செய்யப்பட்டு மின்சாரம் வழங்குவதாக உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்