search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை (கோப்பு படம்)
    X
    தற்கொலை (கோப்பு படம்)

    செய்துங்கநல்லூர் அருகே தூக்கு போட்டு லாரி டிரைவர் தற்கொலை

    செய்துங்கநல்லூர் அருகே லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் அருகில் கல்குவாரி உள்ளது. இங்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த காசிராஜன்(வயது 38) என்பவர் லாரி டிரைவராக உள்ளார். இவருக்கு சொந்தமாக ஒரு லாரி இருக்கிறது. மேலும் 7 லாரியை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் கருங்குளம் பகுதியில் தான் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து செய்துங்கநல்லூர் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×