search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் விசாராணை"

    பெரியகுளம் அருகே கூலித்தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    பெரியகுளம் அருகே உள்ள தென்கரை செயிண்ட் சேவியர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது34). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கோவில் அருகே அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதுபற்றி பாலசுப்பிரமணியனின் தம்பி சிவராஜ் தென்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பாலசுப்பிரமணியனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சிவராஜ் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    ×