என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் கருணாநிதி சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்
Byமாலை மலர்27 Jun 2019 8:45 AM GMT (Updated: 27 Jun 2019 8:45 AM GMT)
சென்னையில் ஆகஸ்டு 7-ந்தேதி கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிற ஆகஸ்டு 7-ந்தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை வைக்கப்பட உள்ளது. இந்த சிலை மீஞ்சூரில் தயாராகி வருகிறது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிலை வடிவமைக்கும் பணியை பார்வையிட்டு வந்துள்ளார்.
ஆகஸ்டு 7-ந்தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த சிலையை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார். விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். இதற்கான அழைப்பிதழை அவரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி கருணாநிதியின் முழு உருவ சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்றார்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வருகிற ஆகஸ்டு 7-ந்தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
இதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை வைக்கப்பட உள்ளது. இந்த சிலை மீஞ்சூரில் தயாராகி வருகிறது.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அங்கு நேரில் சென்று சிலை வடிவமைக்கும் பணியை பார்வையிட்டு வந்துள்ளார்.
ஆகஸ்டு 7-ந்தேதி கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த சிலையை மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி திறந்து வைக்க உள்ளார். விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். இதற்கான அழைப்பிதழை அவரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.
அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி கருணாநிதியின் முழு உருவ சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் பங்கேற்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X