search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னூரில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    அன்னூரில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை வி‌ஷம் குடித்து தற்கொலை

    அன்னூரில் திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னூர்:

    அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பன் பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் சம்பத்குமார் (31). இவருக்கும் ஈஸ்வரி (26) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

    3 மாதம் தனிமையில் வாழ்ந்த சம்பத்குமார் விரக்தியடைந்தார். சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் குரும்பபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சம்பத்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×