search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமாப்பிள்ளை தற்கொலை"

    • திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்தார்.
    • தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் புது பஸ் நிலையத்தில் சம்பவத்தன்று ஒரு வாலிபர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையில் விஷம் குடித்த யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் விருதுநகர் சுலோச்சனா தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் கணேசன் (வயது25) என தெரியவந்தது. இவருக்கு கடந்த ஜூன் மாதம் விசாலாட்சி என்பவருடன் திருமணமானது.

    கணேசன் ஸ்ரீவில்லி புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். 4 வருடங்க ளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய அவருக்கு முதுகு தண்டுவட சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கணேசன் விஷம் குடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இந்தநிலையில் பாளையங்கோட்டையில் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி விசாலாட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • சரவணன் தற்கொலை செய்தது எதற்காக என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • திருமணத்தின் போது வழங்கிய நகை மற்றும் திருமண செலவு உள்ளிட்டவற்றை பெண் வீட்டார் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள சிறுகரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது 2-வது மகன் சரவணன் (வயது29). இவர் சுங்குவார்சத்திரத்தில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கும் செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பெரிய தெருவைச் சேர்ந்த சுவேதா என்பவருக்கும் கடந்த 17-ந்தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் சரவணன் திருமணமான 2 நாளிலேயே கடந்த 19-ந்தேதி மனைவியின் முகூர்த்த புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தேனிலவுக்கு செல்ல சரவணன் திட்டமிட்டு இருந்த நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடைளே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    சரவணனும், சுவேதாவும் நெருங்கிய உறவினர்கள் ஆவர். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அவர்களின் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு சரவணன் மாமனாரின் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது. சுவேதாவும் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வந்து உள்ளார்.

    சரவணன் தற்கொலை செய்தது எதற்காக என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சரவணனின் தந்தை மஞ்சுநாதன் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

    அதில் திருமணத்தின் போது வழங்கிய நகை மற்றும் திருமண செலவு உள்ளிட்டவற்றை பெண் வீட்டார் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளனர். மேலும் திருமணத்தின் போது செய்த செலவு பட்டியலையும் வழங்கி இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சரவணனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த 17-ந்தேதி தடபுடலாக திருமணம் நடந்தது.
    • திருமணத்துக்கு பிறகு 2 நாட்கள் கழித்து மணமக்கள் திம்மாவரத்தில் உள்ள மணமகளின் வீட்டுக்கு சென்றனர்.

    செங்கல்பட்டு:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற சுவேதா (21).

    இவர்கள் இருவரும் உறவினர்கள். இதனால் இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தனர். சுவேதா தற்போது கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சரவணனுக்கும், சுவேதாவுக்கும் திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 1 வருடத்துக்கு முன்பு அவர்களின் நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிச்சயதார்த்தத்துக்கு பிறகு சரவணன் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்தார். சுவேதாவும் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் சரவணனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த 17-ந்தேதி தடபுடலாக திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு 2 நாட்கள் கழித்து மணமக்கள் திம்மாவரத்தில் உள்ள மணமகளின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு கடந்த 19-ந்தேதி முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவு 9 மணியளவில் புதுமண தம்பதிகள் தங்களின் அறைக்கு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சுவேதா கூச்சல் போட்டபடியே அறை கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்தார். பின்னர் அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு புதுமாப்பிள்ளை சரவணன் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் மணமகள் சுவேதாவின் முகூர்த்த புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து சுவேதா மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    சரவணன் 19-ந்தேதி இரவு அவரது பெற்றோருக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது தேனிலவுக்கு செல்ல இருக்கும் இடங்களை பற்றி கூறியுள்ளார்.

    20-ந்தேதி தேனிலவு பயணத்தை தொடங்குவதாகவும் கூறியுள்ளார்.

    ஆனால் அதற்குள் அவர் தற்கொலை செய்திருக்கிறார். தாம்பத்ய உறவில் திருப்தி இல்லாததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • செந்தமிழ்செல்வன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நீலக்கண்ணன் மகன் செந்தமிழ்செல்வன் (வயது 28). சிதம்பரம் நகராட்சியில் தற்காலிக டிரைவராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் செந்தமிழ்செல்வன் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து கடந்த 15-ந்தேதி வயிற்று வலி அதிகமானதால் வலியில் அலறி துடித்தார்.

    இதனால் மன வேதனையில் இருந்த செந்தமிழ்செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் செந்தமிழ்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்தமிழ்செல்வனின் சகோதரர் நடராஜன் சிதம்பரம் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் மன விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார்.
    • மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூண்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வினோதினி என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    ஞானசேகரனுக்கு குடி பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. பெரியவர்கள் சமாதானம் செய்து வைத்தபோதும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன விரக்தியில் இருந்த ஞானசேகரன் விஷம் குடித்து மயங்கினார்.

    அவரது உறவினர்கள் அவரை மீட்டு கொடை க்கானல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை காஞ்சனா என்ற பெண்ணை விக்னேஷ் திருமணம் செய்து கொண்டார்.
    • சம்பவத்தன்று ராமநதி அணைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு கோவிலின் முன்பு விக்னேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேலமாதாபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை காஞ்சனா(20) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமநதி அணைக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு கோவிலின் முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் பாளையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விக்னேஷ் சரிவர வேலை செய்யாமல் இருந்து வந்ததாகவும், அதனை விக்னேசின் தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பிரபாகரன் கடந்த மாதம் கரூரை சேர்ந்த கோமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    • கோமதி தனது சொந்த ஊரான கரூர் சென்று விடலாம் என தெரிவித்துள்ளார்.

    பொள்ளாச்சி

    பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் கே.எம்.பட்டினத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). கூலி தொழிலாளி.

    கடந்த மாதம்

    இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப தகராறு காரணமாக 4 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் பிரபாகரன் கடந்த மாதம் கரூரை சேர்ந்த கோமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அதனை அவரது மனைவி கண்டித்து அறிவுரை கூறிவந்தார். ேமலும் பிரபாகரனிடம், கோமதி தனது சொந்த ஊரான கரூர் சென்று விடலாம் என தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதற்கு பிரபாகரன் மறுப்பு தெரிவித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனை நினைத்து பிரபாகரன் மனவேதனை அடைந்து வந்தார்.

    தற்கொலை

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மனமுடைந்த தங்க மாரியப்பன் கடந்த 14 -ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத பொழுது விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
    • அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வாணிவ பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(வயது 35).

    இவருக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது எனவும் தெரியவந்துள்ளது. ரஜினி ரசிகரான இவர் கடந்த 12-ந் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார்.

    இதனை அவரது தாய் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்க மாரியப்பன் கடந்த 14 -ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத பொழுது விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுபின் வீட்டின் பின்பகுதியில் தாழ்வாரத்தில் உள்ள இரும்பு கொக்கியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கருங்கல்:

    கருங்கல் அருகே பூட்டேற்றி வடக்கு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் டேவி. இவரது மகன் சுபின் (வயது 32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு படையில் வேலை செய்து வந்தார்.

    பெற்றோர் சுபினுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். விழுந்தயம்பலம் பகுதியைச் சேர்ந்த உறவினர் தனிஷாவிற்கும் சுபினுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டார் பேசி முடிவு செய்தனர். கடந்த 14-ந் தேதி இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து சுபின் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இவர் குணமடைந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சுபின்- தனிஷியாவிற்கு திருமணம் நடந்தது. நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இன்று அதிகாலையில் கண் விழித்து சுபின் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

    வீட்டிற்கு வெளியே திடீரென சுபினின் அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது சுபின் வீட்டின் பின்பகுதியில் தாழ்வாரத்தில் உள்ள இரும்பு கொக்கியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சுபினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    சுபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பண்ருட்டியில் திருமணமான 1 ஆண்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் மருவன் தெரு வை சேர்ந்தவர்பாலசண்முகம். அவரது மகன் இளங்குமார் (34) என்பவர் பூதம்பாடியைச் சேர்ந்த ராஜேஸ்வரிஎன்பவரை திருமணம் செய்து ஓர் ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் 7ம் தேதி நெய்வேலியில் நடை பெற்ற தங்கை மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இளங்குமார் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த போது ஃபேன் கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய் துகொண்டார் இதுபற்றி தாயார் இளவரசி முத்தாண்டி குப்பம் போலிசில் கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    • திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளங்கோ குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி, அருப்புமேடு, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 22). கேபிள் டிவி ஆபரேட்டரிடம் வேலை செய்து வந்தார். இவர் தனது அத்தை மகளை காதலித்து வந்தார்.

    இவர்களது காதலுக்கு இளங்கோவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அத்தை மகளை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு தனது வீட்டிற்கு செல்லாமல் பெண்ணின் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளங்கோ பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இளங்கோ குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை

    கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றார்.

    இதனால் பிரபாகரன் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி கோளார்பட்டி சங்கம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 75). தொழிலாளி.

    இவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று மணி மது வாங்கி திப்பம்பட்டி செக் டேம் பகுதியில் பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்தார்.

    அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவர் பாலத்தில் இருந்து தவறி அனையில் விழுந்தார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர். இதுகுறித்து கோமங்களம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×