search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை
    X

    காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை

    • திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து இளங்கோ குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி, அருப்புமேடு, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் இளங்கோ (வயது 22). கேபிள் டிவி ஆபரேட்டரிடம் வேலை செய்து வந்தார். இவர் தனது அத்தை மகளை காதலித்து வந்தார்.

    இவர்களது காதலுக்கு இளங்கோவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அத்தை மகளை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு தனது வீட்டிற்கு செல்லாமல் பெண்ணின் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனைக் கண்ட அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளங்கோ பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இளங்கோ குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×