search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ெபாள்ளாச்சியில் புதுமாப்பிள்ளை தற்கொலை
    X

    ெபாள்ளாச்சியில் புதுமாப்பிள்ளை தற்கொலை

    • பிரபாகரன் கடந்த மாதம் கரூரை சேர்ந்த கோமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
    • கோமதி தனது சொந்த ஊரான கரூர் சென்று விடலாம் என தெரிவித்துள்ளார்.

    பொள்ளாச்சி

    பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் கே.எம்.பட்டினத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). கூலி தொழிலாளி.

    கடந்த மாதம்

    இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. குடும்ப தகராறு காரணமாக 4 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர் பிரபாகரன் கடந்த மாதம் கரூரை சேர்ந்த கோமதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அதனை அவரது மனைவி கண்டித்து அறிவுரை கூறிவந்தார். ேமலும் பிரபாகரனிடம், கோமதி தனது சொந்த ஊரான கரூர் சென்று விடலாம் என தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதற்கு பிரபாகரன் மறுப்பு தெரிவித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனை நினைத்து பிரபாகரன் மனவேதனை அடைந்து வந்தார்.

    தற்கொலை

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×