search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருங்கல் அருகே திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை
    X

    கருங்கல் அருகே திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை

    • சுபின் வீட்டின் பின்பகுதியில் தாழ்வாரத்தில் உள்ள இரும்பு கொக்கியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    கருங்கல்:

    கருங்கல் அருகே பூட்டேற்றி வடக்கு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் டேவி. இவரது மகன் சுபின் (வயது 32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்பு படையில் வேலை செய்து வந்தார்.

    பெற்றோர் சுபினுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். விழுந்தயம்பலம் பகுதியைச் சேர்ந்த உறவினர் தனிஷாவிற்கும் சுபினுக்கும் திருமணம் செய்ய இரு வீட்டார் பேசி முடிவு செய்தனர். கடந்த 14-ந் தேதி இவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து சுபின் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இவர் குணமடைந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சுபின்- தனிஷியாவிற்கு திருமணம் நடந்தது. நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இன்று அதிகாலையில் கண் விழித்து சுபின் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

    வீட்டிற்கு வெளியே திடீரென சுபினின் அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் அங்கு ஓடி சென்றனர். அப்போது சுபின் வீட்டின் பின்பகுதியில் தாழ்வாரத்தில் உள்ள இரும்பு கொக்கியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சுபினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    சுபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 3-வது நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×