search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரஜினி பிறந்த நாளை கொண்டாடியதை தாய் திட்டியதால் புதுமாப்பிள்ளை தற்கொலை
    X

    ரஜினி பிறந்த நாளை கொண்டாடியதை தாய் திட்டியதால் புதுமாப்பிள்ளை தற்கொலை

    • மனமுடைந்த தங்க மாரியப்பன் கடந்த 14 -ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத பொழுது விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
    • அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வாணிவ பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்க மாரியப்பன்(வயது 35).

    இவருக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது எனவும் தெரியவந்துள்ளது. ரஜினி ரசிகரான இவர் கடந்த 12-ந் தேதி ரஜினி பிறந்தநாள் அன்று கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடி உள்ளார்.

    இதனை அவரது தாய் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்க மாரியப்பன் கடந்த 14 -ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத பொழுது விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×