search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "groom suicide"

    • திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்தார்.
    • தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் புது பஸ் நிலையத்தில் சம்பவத்தன்று ஒரு வாலிபர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையில் விஷம் குடித்த யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் விருதுநகர் சுலோச்சனா தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் கணேசன் (வயது25) என தெரியவந்தது. இவருக்கு கடந்த ஜூன் மாதம் விசாலாட்சி என்பவருடன் திருமணமானது.

    கணேசன் ஸ்ரீவில்லி புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். 4 வருடங்க ளுக்கு முன்பு விபத்தில் சிக்கிய அவருக்கு முதுகு தண்டுவட சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கணேசன் விஷம் குடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இந்தநிலையில் பாளையங்கோட்டையில் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மனைவி விசாலாட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    • பண்ருட்டியில் திருமணமான 1 ஆண்டில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பேர்பெரியான் குப்பம் மருவன் தெரு வை சேர்ந்தவர்பாலசண்முகம். அவரது மகன் இளங்குமார் (34) என்பவர் பூதம்பாடியைச் சேர்ந்த ராஜேஸ்வரிஎன்பவரை திருமணம் செய்து ஓர் ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த 6-ம் தேதி மேற்படி ராஜேஸ்வரி பூதம்பாடி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் 7ம் தேதி நெய்வேலியில் நடை பெற்ற தங்கை மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்ல முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இளங்குமார் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த போது ஃபேன் கொக்கியில் புடவையால் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய் துகொண்டார் இதுபற்றி தாயார் இளவரசி முத்தாண்டி குப்பம் போலிசில் கொடுத்த புகாரின் பேரில் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்துவழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    ×