search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு அருகே திருமணமான 2 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை
    X

    செங்கல்பட்டு அருகே திருமணமான 2 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை

    • சரவணனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த 17-ந்தேதி தடபுடலாக திருமணம் நடந்தது.
    • திருமணத்துக்கு பிறகு 2 நாட்கள் கழித்து மணமக்கள் திம்மாவரத்தில் உள்ள மணமகளின் வீட்டுக்கு சென்றனர்.

    செங்கல்பட்டு:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

    செங்கல்பட்டு அருகே உள்ள திம்மாவரம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற சுவேதா (21).

    இவர்கள் இருவரும் உறவினர்கள். இதனால் இருவரும் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தனர். சுவேதா தற்போது கல்லூரியில் பி.காம். படித்து வருகிறார்.

    இந்த நிலையில் சரவணனுக்கும், சுவேதாவுக்கும் திருமணம் செய்து வைக்க இருவரின் பெற்றோரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 1 வருடத்துக்கு முன்பு அவர்களின் நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நிச்சயதார்த்தத்துக்கு பிறகு சரவணன் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்தார். சுவேதாவும் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் சரவணனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த 17-ந்தேதி தடபுடலாக திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு 2 நாட்கள் கழித்து மணமக்கள் திம்மாவரத்தில் உள்ள மணமகளின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு கடந்த 19-ந்தேதி முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரவு 9 மணியளவில் புதுமண தம்பதிகள் தங்களின் அறைக்கு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சுவேதா கூச்சல் போட்டபடியே அறை கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவந்தார். பின்னர் அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவரது பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு புதுமாப்பிள்ளை சரவணன் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் மணமகள் சுவேதாவின் முகூர்த்த புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்து சுவேதா மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    சரவணன் 19-ந்தேதி இரவு அவரது பெற்றோருக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது தேனிலவுக்கு செல்ல இருக்கும் இடங்களை பற்றி கூறியுள்ளார்.

    20-ந்தேதி தேனிலவு பயணத்தை தொடங்குவதாகவும் கூறியுள்ளார்.

    ஆனால் அதற்குள் அவர் தற்கொலை செய்திருக்கிறார். தாம்பத்ய உறவில் திருப்தி இல்லாததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தகவல் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×