என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காலாப்பட்டு அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்25 Jun 2019 9:02 AM GMT (Updated: 25 Jun 2019 9:02 AM GMT)
காலாப்பட்டு அருகே விவாகரத்து பெற்ற பின்னர் மனைவியுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தியதால் விரக்தி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேதராப்பட்டு:
காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான கழுப்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் அசோக்குமார் (வயது 33). இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், பிள்ளைச்சாவடியை சேர்ந்த ஆறுமுகம் மகள் ஜெயலட்சுமிக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் கோர்ட்டில் விவாகரத்தும் பெற்றனர்.
இந்த நிலையில் இரு வீட்டார் உறவினர்களும் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அசோக்குமாரிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அசோக்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று அவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள வயல் வெளியில் உள்ள வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அசோக்குமாரின் தந்தை ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான கழுப்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் அசோக்குமார் (வயது 33). இவர் காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், பிள்ளைச்சாவடியை சேர்ந்த ஆறுமுகம் மகள் ஜெயலட்சுமிக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் கோர்ட்டில் விவாகரத்தும் பெற்றனர்.
இந்த நிலையில் இரு வீட்டார் உறவினர்களும் மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு அசோக்குமாரிடம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அசோக்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
நேற்று அவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள வயல் வெளியில் உள்ள வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அசோக்குமாரின் தந்தை ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X