search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை"

    எல்லைப்பிள்ளை சாவடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப் பிள்ளைச்சாவடி மணக்குள விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் மரிஜான் (வயது 45). இவருக்கு ஜோஸ்பின் (39) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    புதுவையில் இண்டர்நெட் சென்டர் நடத்தி வந்த ராஜேஷ் மரிஜான் அதில் நஷ்டம் ஏற்படவே இண்டர்நெட் சென்டரை மூடி விட்டு சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறை நாட்களில் புதுவை வந்து மனைவி- மகன்களை பார்த்து விட்டு செல்வது வழக்கம். புதுவை வரும் போது ராஜேஷ் மரிஜான் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அதுபோல் நேற்று வாக்களிக்க புதுவை வந்த ராஜேஷ் மரிஜான் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் வேதனை அடைந்த ராஜேஷ் மரிஜான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் நாகமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை அருகே செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததை தந்தை கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டை அடுத்த நல்லூர் குச்சிபாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர் தனியார் பஸ் ஒன்றில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். இவரது ஒரே மகன் ஹேமசந்திரன் (வயது23). இவர் டிப்ளமோ படிப்பு முடித்து விட்டு திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இவர் வீட்டில் இருக்கும் போது எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அதுபோல் நேற்று காலையும் யாருடனோ ஹேமச்சந்திரன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை சேகர் கண்டித்தார். பின்னர் அவர் வேலைக்கு சென்று விட்டார்.

    தந்தை திட்டியதால் மனமுடைந்த ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மாலை அவரது தாய் கோமதி கடைக்கு சென்றிருந்த வேளையில் வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் ஹேமச்சந்திரன் தூக்குபோட்டு தொங்கினார்.

    கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய கோமதி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஹேமச்சந்திரனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×