என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலனுடன் கொடைக்கானலுக்கு சென்ற திண்டுக்கல் நகைக்கடை ஊழியர் பலி
Byமாலை மலர்24 Jun 2019 10:45 AM GMT (Updated: 24 Jun 2019 10:45 AM GMT)
காதலனுடன் கொடைக்கானலுக்கு சென்ற திண்டுக்கல் நகை கடை பெண் ஊழியர் மலையில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
திண்டுக்கல்:
ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் உமா(வயது24). இவர் திண்டுக்கல்லில் உள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும் பிரகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் உமா நேற்று தனது காதலனுடன் கொடைக்கானலுக்கு சென்றார்.
அங்கு காதலனுடன் கைகோர்த்தபடி மலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக உமா மலையில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உமா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தாண்டிக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சியை சேர்ந்த வினோத் (வயது 24), அவரது நண்பர் சக்தி (26) உள்பட 10 பேர் மோட்டார் சைக்கிள்களில் கொடைக்கானலை சுற்றி பார்க்க வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சம்பவத்தன்று திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தாண்டிக்குடி அருகே உள்ள மயிலாடும் பாறை என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பும் போது வினோத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பிரேக் பிடிக்காமல் சாலையில் தாறுமாராக ஓடி விபத்துக்குள்ளானது.
இதில் வினோத் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த சக்தி ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி பரிதாபமான இறந்தார். வினேத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் உமா(வயது24). இவர் திண்டுக்கல்லில் உள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரும் பிரகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் உமா நேற்று தனது காதலனுடன் கொடைக்கானலுக்கு சென்றார்.
அங்கு காதலனுடன் கைகோர்த்தபடி மலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக உமா மலையில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உமா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தாண்டிக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சியை சேர்ந்த வினோத் (வயது 24), அவரது நண்பர் சக்தி (26) உள்பட 10 பேர் மோட்டார் சைக்கிள்களில் கொடைக்கானலை சுற்றி பார்க்க வந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சம்பவத்தன்று திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தாண்டிக்குடி அருகே உள்ள மயிலாடும் பாறை என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பும் போது வினோத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பிரேக் பிடிக்காமல் சாலையில் தாறுமாராக ஓடி விபத்துக்குள்ளானது.
இதில் வினோத் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த சக்தி ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி பரிதாபமான இறந்தார். வினேத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X