search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கபிஸ்தலம் அருகே மணல் அள்ளிய வாலிபர் கைது
    X

    கபிஸ்தலம் அருகே மணல் அள்ளிய வாலிபர் கைது

    கபிஸ்தலம் அருகே மணல் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் காவல் சரக பகுதிகளில் கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் ராகவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தியாக சமுத்திரம் மெயின் ரோட்டில் அனுமதியின்றி காவிரி ஆற்றில் இருந்து மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தியாக சமுத்திரம் வடக்கு வீதி அன்பழகன் மகன் அன்புச்செல்வன் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.

    Next Story
    ×