search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
    X

    பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்

    தர்மபுரி மாவட்டம் பாடி அருகே பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.
    தர்மபுரி

    தர்மபுரி மாவட்டம், பாடி அடுத்துள்ள பூகானஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளியான இவரது மனைவி அனிதா (வயது 26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

    கடந்த 10-ந் தேதி அன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த அனிதா திடீரென மாயமானார். இதனால் அவரை முனியப்பன் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அனிதா கிடைக்க வில்லை.

    இது குறித்து முனியப்பன் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான அனிதாவை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×