search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே விவசாயி வீடு தீப்பிடித்து ரூ.1¾ லட்சம் சாம்பல்
    X

    தஞ்சை அருகே விவசாயி வீடு தீப்பிடித்து ரூ.1¾ லட்சம் சாம்பல்

    தஞ்சை அருகே தீப்பிடித்து கூரை வீடு எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள நெல்லுப்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 43) விவசாயி. இவர் கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றார். அப்போது வீட்டின் மேற்கூரையில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென பரவி கூரை முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக தஞ்சை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகின. இதில் வீட்டில் இருந்த ரொக்கம் பணம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம், 3 சவரன் தங்க நகைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் தீக்கிரையானது. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இத குறித்து சசிகுமார் தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×