search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபநாசம் அருகே இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை
    X

    பாபநாசம் அருகே இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை

    பாபநாசம் அருகே வயிற்று வலி காரணமாக எலி மருந்தை தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாபநாசம்:

    பாபநாசம் அருகே பண்டாரவாடை வருணதைக்கால் தெருவில் வசித்து வருபவர் முகமது தாரிக் ( வயது 30) டைலர். இவரது மனைவி சக்கராப்பள்ளி மேலத்தெருவை சேர்ந்த ஜன்னத்துல்பிர்தெளஸ்(23). இவர்களுக்கு சகாப்தின் (4) என்ற ஒரு மகன் உள்ளார். ஜன்னத்துல் பிர்தெளஸ்க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இதனால் மனமுடைந்து அவர் எலி மருந்தை தின்று மயங்கினார். உடனே அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

    இதுகுறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவருக்கு திருமணமாகி 5 வருடமே அவதால் ஆர்.டி.ஓ.சுரேஷ் தனி விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×