search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கொடுமைபடுத்திய கணவர்-மாமியார் மீது வழக்கு
    X

    ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கொடுமைபடுத்திய கணவர்-மாமியார் மீது வழக்கு

    ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைபடுத்திய கணவர் மற்றும் மாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அமச்சியாபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 30). இவருக்கு சண்முகப்பிரியா (26) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். அய்யனார் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    மேலும் செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் அய்யனாரும், அவரது தாய் சுந்தரம்மாளும் 10 பவுன் நகை வரதட்சணையாக வாங்கி வரச் சொல்லி சண்முகப்பிரியாவை அடித்து கொடுமைபடுத்தியுள்ளனர்.

    இது குறித்து சண்முகப்பிரியா ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய அய்யனார் மற்றும் அவரது தாய் சுந்தரம்மாள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×