என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின் உற்பத்தி தொடங்கிய 17 நாளில் கூடங்குளம் முதல் அணுஉலை மீண்டும் நிறுத்தம்
Byமாலை மலர்5 Jun 2019 8:22 AM GMT (Updated: 5 Jun 2019 8:22 AM GMT)
மின் உற்பத்தி தொடங்கிய 17 நாளில் கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன், தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதலாவது அணு உலையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி நள்ளிரவு முதல் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி, மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி அடிக்கடி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும், எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காகவும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடந்தன.
தொடர்ந்து முதலாவது அணு உலையில் கடந்த மாதம் 18-ந் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர் அங்கு மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 970 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் மின் உற்பத்தி தொடங்கி 17 நாட்களிலேயே மீண்டும் நேற்று மதியம் 12.30 மணிக்கு முதலாவது அணு உலையில் உள்ள வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக, அங்கு மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த பழுதை சரி செய்யும் பணியில் அணுமின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர். அங்கு விரைவில் பழுதை சரி செய்து, இன்னும் ஓரிரு நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்தது. கூடங்குளம் அணுமின் நிலைய 2-வது அணு உலையில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் தொடர்ந்து அங்கு குறைந்த அளவே மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை 575 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன், தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதலாவது அணு உலையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி நள்ளிரவு முதல் வணிக ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி, மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி அடிக்கடி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும், எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காகவும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடந்தன.
தொடர்ந்து முதலாவது அணு உலையில் கடந்த மாதம் 18-ந் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர் அங்கு மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 970 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் மின் உற்பத்தி தொடங்கி 17 நாட்களிலேயே மீண்டும் நேற்று மதியம் 12.30 மணிக்கு முதலாவது அணு உலையில் உள்ள வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக, அங்கு மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த பழுதை சரி செய்யும் பணியில் அணுமின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர். அங்கு விரைவில் பழுதை சரி செய்து, இன்னும் ஓரிரு நாட்களில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்தது. கூடங்குளம் அணுமின் நிலைய 2-வது அணு உலையில் 1000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் தொடர்ந்து அங்கு குறைந்த அளவே மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை 575 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X