search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியாகதுருகம் அருகே விபத்து: வாலிபர் பலி
    X

    தியாகதுருகம் அருகே விபத்து: வாலிபர் பலி

    தியாகதுருகம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டு காலனி பகுதியில் சில மாதகாலமாக கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டடு வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் வெகுதூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    அதே கிராமத்தை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 21).

    நேற்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் குடத்துடன் தண்ணீர் பிடிப்பதற்காக சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து பெரியமாம்பட்டு ஜெயந்தி காலனி பகுதிக்கு சென்றார். மினி டேங்கில் தண்ணீர் பிடித்து கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

    தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மணிவாசகம் மீது திடீரென மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த மணிவாசகத்தை அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் வழியிலே பரிதாபமாக மணிவாசகம் இறந்தார்.

    இது குறித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    விபத்தை ஏற்படுத்திய சேலம் குகை பகுதியை சேர்ந்த கார் டிரைவர் சரவணகுமாரை (33) பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

    Next Story
    ×