என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் வாலிபரிடம் கத்தி முனையில் பணம்-செல்போன் பறிப்பு
மதுரை:
மதுரை ஐராவதநல்லூர் கண்மாய் அருகே தூத்துக்குடியை சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது 27) நடந்து சென்றார். அப்போது 3 பேர் திடீரென வழி மறித்தனர். அவர்கள், பிரவீன்ராஜ் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.
மேலும் அவரிடம் இருந்து ரூ. 7 ஆயிரத்து 400 மற்றும் ஆப்பிள் செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் பிரவீன்ராஜ் புகார் செய்தார். அதில், ரூ.75 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் பணம் பறித்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சண்முககுரு (20), ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த சிவகுமார் (20), அஜீத்குமார் (20) ஆகியோர்தான் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்