என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே லாரியில் இருந்து டீசல் திருடியவர் கைது
Byமாலை மலர்20 March 2019 4:38 PM GMT (Updated: 20 March 2019 4:38 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே லாரியில் இருந்து டீசல் திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 35 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 23). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று லாரியை கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி சென்றார். அப்போது சுண்டம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக ரோட்டோரம் லாரியை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது அங்கு ஒரு வாலிபர் லாரியில் டீசல் திருடினார்.
இதனை கண்ட சக்கரவர்த்தி பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து கந்திகுப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கோபிகவுடா என்பதும், லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து லாரியில் இருந்து திருடப்பட்ட 35 லிட்டர் டீசலை பறிமுதல் செய்து கோபிகவுடாவை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X