search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருங்கல் அருகே ஆசிரியரை வழிமறித்து தாக்கிய முகமூடி கும்பல்- போலீசார் விசாரணை
    X

    கருங்கல் அருகே ஆசிரியரை வழிமறித்து தாக்கிய முகமூடி கும்பல்- போலீசார் விசாரணை

    கருங்கல் அருகே பள்ளிக்கூடத்திற்கு சென்ற ஆசிரியரை வழிமறித்து தாக்கிய முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள பாலூரை சேர்ந்தவர் ஜாண் எட்வின் (வயது 52). இவர் மத்திக்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளில் ஜாண் எட்வின் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    மத்திக்கோடு பகுதியில் அவர் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. அவர்கள் அனைவரும் தங்களை மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக முகத்தை துணியால் மூடி மறைத்து இருந்தனர்.

    அந்த 3 பேரும் ஆசிரியர் ஜாண்எட்வினிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் அந்த முகமூடி கும்பல் தங்கள் கைகளில் இருந்த இரும்பு கம்பி, சுத்தியல் போன்ற ஆயுதங்களால் ஆசிரியரை சரமாரி யாக தாக்கினார்கள். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் ஜாண் எட்வின் கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப் பார்த்ததும் அந்த முகமூடி கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டது.

    முகமூடி கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆசரியர் ஜாண்எட்வின் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் பற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை தாக்கிய முகமூடி கும்பலை சேர்ந்தவர்கள் யார்? எதற்காக இந்த தாக்குதல் நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×