என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருங்கல் அருகே ஆசிரியரை வழிமறித்து தாக்கிய முகமூடி கும்பல்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்27 Feb 2019 2:49 PM GMT (Updated: 27 Feb 2019 2:49 PM GMT)
கருங்கல் அருகே பள்ளிக்கூடத்திற்கு சென்ற ஆசிரியரை வழிமறித்து தாக்கிய முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள பாலூரை சேர்ந்தவர் ஜாண் எட்வின் (வயது 52). இவர் மத்திக்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளில் ஜாண் எட்வின் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
மத்திக்கோடு பகுதியில் அவர் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. அவர்கள் அனைவரும் தங்களை மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக முகத்தை துணியால் மூடி மறைத்து இருந்தனர்.
அந்த 3 பேரும் ஆசிரியர் ஜாண்எட்வினிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் அந்த முகமூடி கும்பல் தங்கள் கைகளில் இருந்த இரும்பு கம்பி, சுத்தியல் போன்ற ஆயுதங்களால் ஆசிரியரை சரமாரி யாக தாக்கினார்கள். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் ஜாண் எட்வின் கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப் பார்த்ததும் அந்த முகமூடி கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டது.
முகமூடி கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆசரியர் ஜாண்எட்வின் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் பற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை தாக்கிய முகமூடி கும்பலை சேர்ந்தவர்கள் யார்? எதற்காக இந்த தாக்குதல் நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X