search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரியில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி
    X

    பொன்னேரியில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

    பொன்னேரியில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காட்டாவூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் தனசேகர் (வயது 13). பொன்னேரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று காலை அவர் பள்ளிக்கு அரசு பஸ்சில் சென்றார். பொன்னேரி தேரடி பகுதியில் நின்று புறப்பட்டபோது தனசேகர் ஓடும் பஸ்சில் தாவி ஏறினார்.

    இதில் நிலைதடுமாறிய தனசேகர் கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×