search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா சிலைக்கு 3ந்தேதி எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். அஞ்சலி
    X

    அண்ணா சிலைக்கு 3ந்தேதி எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். அஞ்சலி

    பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு நாளான 3-ந்தேதி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்துகின்றனர். #ADMK #EPS #OPS
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் 50-வது நினைவு நாளான 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகளும், பிரதிநிதிகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK #EPS #OPS
    Next Story
    ×