என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கேரளாவுக்கு பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
கூடலூர்:
கூடலூர்- கேரளா எல்லையான வழிக்கடவு சோதனைச்சாவடியில் கேரள மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிஷ் தலைமையில் சிஜூமோகன், யூசுப் உள்பட போலீசார் வாகனங்களை முழு தணிக்கை செய்த பின்னரே கேரளாவுக்கு அனுமதித்தனர்.
அப்போது மைசூரில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சென்ற கர்நாடகா பதிவு எண் கொண்ட அரசு பஸ்சை நிறுத்தி மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி அமர்ந்து இருந்த 2 பேரின் பைகளை சோதனை செய்தனர். அதில் பையின் மேற்புறம் காய்கறிகள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பைகளை முழுமையாக சோதித்தனர்.
அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகள் 4 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அந்த பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த நவுசாத் (வயது 35), ரபீக் அகமது (41) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது. இது குறித்து வழிக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து நவுசாத், ரபீக் அகமது ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்