என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேலம் சூரமங்கலத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
சேலம்:
சேலம் ரெட்டியூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் நாகலெட்சுமி (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலெட்சுமி திருடன்...திருடன்... என்று சத்தம் போட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் பறித்த செயினுடன் மோட்டார் சைக்கிளில் அதே வேகத்தில் தப்பினர்.
இதனால் கதறி அழுது புரண்ட நாகலெட்சுமி சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலம் மாநகரில் சூரமங்கலம், அழகாபுரம், கன்னங்குறிச்சி ஆகிய 3 இடங்களில் ஒரே நாளில் 3 பெண்களிடம் செயின் பறித்த நிலையில் தற்போது நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் பெண்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்