என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பணம் கொள்ளை - வாலிபர் கைது
Byமாலை மலர்18 Dec 2018 10:32 AM GMT (Updated: 18 Dec 2018 10:32 AM GMT)
திருமங்கலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:
திருமங்கலம் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசுவரன் (வயது40). முன்னாள் தே.மு.தி.க. கவுன்சிலரான இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர் கல்லாபெட்டியில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினான்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய நபரை தேடி வந்தனர்.
தொடர் விசாரணையில் சூப்பர் மார்க்கெட்டில் பணம் திருடியது பெருங்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் விக்கி என்ற விக்னேஷ்(26) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவரை கைது செய்தனர்.
விக்னேஷ் மீது கொலை முயற்சி, வழிப்பறி, கொலை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடததக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X